யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைமுறையில் சாதியமற்ற ஒன்றாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நாம் ஆட்சிக்கு வந்த இரு வருடங்களில் குறித்த பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதற்கான சாதகமான தன்மைகளை உருவாக்கியுள்ளோம். இதன்மூலம் இன்னும் இரண்டு வருடங்களில் நாம் மீதமுள்ள சிக்கல்களுக்கான நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபையால் பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச விசாரணை தொடர்பிலான சிக்கல்கள் ஒன்றை மாத்திரமே நாம் இப்போது எதிர்கொண்டுள்ளோம். இதற்கு காரணம் கடந்த காலங்களில் உள்நாட்டு நீதித்துறையில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையற்ற தன்மையே ஆகும். எனினும் தற்போது நீதித்துறை சுதந்திரமாக்கப்பட்டுள்ளதை எம்மால் பார்க்கமுடிகின்றது.
இதேவேளை தற்போது அரசியல் ரீதியாக சர்வதேச விசாரணையானது சாத்தியமற்ற ஒன்றாக பார்க்கப்படுகின்றது. எனினும் சர்வதேசத்தை திருப்திப்படுத்தக்கூடியதான தீர்வொன்றினை பெற்றுத்தருவது அவசியமாகிறது.
இதற்காக சர்வதேச விசாரணையற்றதும், சர்வதேசத்தை திருப்தி படுத்தக்கூடியதுமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று தேவைப்படுகின்றது என தெரிவித்த அவர் குறித்த விடயம் தொடர்பில் சரியான தீர்வொன்றினை பெற்றுக்கொடுப்பதற்கு நீதித்துறை நிபுணர்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM