கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி கேப்பாபுலவில் அமைத்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையகத்துக்கு முன்பாக இன்று மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் கேப்பாப்புலவின் பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்தின் பிரதான வாயில் முன்பாக திரண்டு இராணுவத்துக்கு எதிராக கோசம் எழுப்பி தமது சொந்த நிலங்களை எம்மிடம் தாருங்கள் என கண்ணீர் மழ்க கதறி அழுது போராட்டத்த்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மக்களின் போராட்டம் காரணமாக சிறிதுநேரம் குறித்த வாயில் ஊடாக மேற்கொள்ளப்படும் இராணுவத்தினரின் போக்குவரத்து நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக குறித்த பகுதிக்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களுடன் கலந்துரையாடி வீதியினை மறிக்க வேண்டாமென கேட்டுக்கொண்டதோடு போக்குவரத்துக்கு இடைஞ்யூறு ஏற்படாதவண்ணம் போராட்டத்தை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்தது மக்கள் வீதியை விட்டுவிலகி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு இன்று முழுவதும் கனமழை பொழிந்து வரும் நிலையில் மக்கள் தளராது மழைக்கு மத்தியிலும் வீதியோரத்தில் அமர்ந்து போராடி வருகின்றனர்.
நேற்ற்று முன்தினம் காலை 128 குடும்பங்களிற்கு சொந்தமான 480 ஏக்கருக்கு அதிகமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
கேப்பாப்புலவு கிராம சேவகர் பிரிவில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமம், சீனியா மோட்டை, பிலக்குடியிருப்பு, இசூரிபுரம் போன்ற கிராமங்கள் காணப்படுகின்ற நிலையில் இதில் அனைத்து கிராமங்களிலும் இராணுவம் நிலைகொண்டுள்ளதோடு கேப்பாப்புலவு பூர்வீக கிராமம் தவிர்ந்த ஏனைய அனைத்து கிராமங்களிலும் பெருமளவான பகுதிகள் இராணுவத்தால் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்தில் பிரதான வீதியை மறித்து குடியிருப்பு காணிகள், வீடுகள், பாடசாலை, வணக்கஸ்தலங்கள், விளையாட்டு மைதானங்கள், தோட்ட நிலங்கள், வயல் நிலங்கள் என அனைத்தையயும் கையகப்படுத்தி 10 இற்கும் மேற்பட்ட இராணுவத்தின் பிரதான படைப்பிரிவுகளை அமைத்து பல இராணுவ முகாம்களை இராணுவம் அமைத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM