தடகளப் போட்டிகளுக்கென்று ஒரு தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அத்தோடு அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அநேகமாக கென்ய நாட்டு பயிற்சியாளர் ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு ஆசிய போட்டிகள் மற்றும் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான இலங்கை அணியை தயார்படுத்துவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள வீரஇ வீராங்கனைகளுக்கான போஷாக்கு நிதித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் சர்வதேச தடகளப் போட்டிகளுக்கான இலங்கை அணியை உருவாக்கும் செயற்றிட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக வீர, வீராங்கனைகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவர்களுக்கு மாதாந்தம் 35 ஆயிரம் ரூபா வீதம் விளையாட்டுத்துறை அமைச்சினால் வழங்கப்படுகின்றது. அதன்படி முதல் கட்டமாக 12 வீர, வீராங்கனைகளுக்கும் 9 பயிற்சியாளர் களுக்கும் விசேட கொடுப்பனவுகளை அமைச்சர் வழங்கினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM