முன்னைய ஆட்சிக்காலத்தில் களுத்துறை சம்பவம் போன்று நடைபெறவில்லையா? அப்படியாயின் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை பாதாள உலகக் குழு செய்யவில்லையாயின் அப்போதைய அரசாங்கமா செய்ததென அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன கேள்வியெழுப்பினார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவரால் களுத்துறை சிறைச்சாலையில் இருந்து வந்த பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் ராஜித சேனாரட்ன அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது முதல்தடவையல்ல, இதற்கு முன்னரும் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எவ்வாறெனினும் விசாரணை நடைபெற்று வருகின்றது. பொலிஸ் அதிகாரியொருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
முன்னைய ஆட்சிக்காலத்தில் இவ்வாறு நடைபெறவில்லையா? அப்படியாயின் முன்னைய ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை பாதாள உலகக் குழு செய்யவில்லையாயின் அப்போதைய அரசாங்கம் செய்ததா?
அதனை முன்னைய அரசாங்கமே முன்னெடுத்து இந்தக் கொலைகளை செய்தததாகவே நாங்கள் கருதுகிறோம். அதுதான் எங்கள் நிலைப்பாடு.
சிறைகளுக்கு செல்லும் அரசியல்வாதிகள், செல்வந்தர்கள், பாதாள உலகக் கோஷ்டியினர் என உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு சில வைத்தியர்கள் உதவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால் இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்த குறிப்பிட்ட வைத்தியர்களை இடமாற்றியிருக்கின்றேன் எனத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM