அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பயணத் தடையிலிருந்து, ஈராக்கை தற்காலிகமாக விலக்கி கொள்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கு ஏழு முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடையை ஏற்படுத்தியமை தொடர்பில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது குடிவரவு கொள்கையில் மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ளார்.
குறித்த தீர்மானத்திற்கமைவாக அமெரிக்காவின் பயணத்தடை பட்டியலிலுள்ள நாடுகளிலிருந்து, ஈராக் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் குறித்த்க தீர்மானமானது அமெரிக்க பாதுகாப்புதுறையான பெண்டகன் மற்றும் அந்நாட்டு மாநில துறைகளின் பரிந்துரைகளுக்கமைய உத்தரவிடப்பட்டுள்ளதாக, அந்நாட்டு குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து, ஏழு முஸ்லீம் நாடுகளுக்கு பயணத்தடை விதித்தல் மற்றும் மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டம் என குடியுரிமை மற்றும் வெளியுறவு கொள்கையில் புதிய உத்தரவுகளை பிறப்பித்து, மக்களின் விமர்சனக்கலை போட்டிருந்த நிலையில் தற்போது ஈராக் மீதான தடையை தகர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM