வவுனியா பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சல் காரணமாக கடந்த 22 ஆம் திகதி இருவர் இனம் காணப்பட்டு அதி தீவிரசிகிச்சைப்பிரில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் மேலும் 5 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது.
நேற்றுமுன் தினம் இருவருக்கும் நேற்று மூவருக்குமாக மொத்தம் ஏழுபேர் இனங்காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த 22ஆம் திகதி இனங்காணப்பட்ட 25 வயதுடைய ஹெப்பிட்டிக்கொலவ பகுதியைச் சேர்ந்த குழந்தை கிடைத்து ஒரு கிழமையான தாயார் தொடர்ந்தும் அதி தீவிரசிகிச்சைப்பிரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 37 வயதுடைய பூவரசம்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த வைத்தியசாலைப் பணிப்பாளர் பன்றிக்காச்சல் ஏற்பட்டவர்களை பார்வையிடுவதற்கு கர்ப்பிணிதாய்மார்கள், சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துவரவேண்டாம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM