சர்வஜன வாக்கெடுப்பு இல்லாது புதிய அரசியல் அமைப்பு நிறைவேற்றப்படாது. என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
மேலும் புதிய அரசியல் அமைப்பின் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் அரசாங்கம் சகல நகர்வுகளையும் முன்னெடுத்து வருகின்றது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளின் ஆதரவுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டார்..
அவர் தொடர்ந்து கூறுகையில், உப குழுக்களின் மூலமாக சகல பிரிவுகளும் ஆராயப்பட்டு வருகின்றது. அதேபோல் மக்கள் கருத்தறியும் நடவடிக்கைகள் பாராளுமன்றதிற்கு வெளியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் அரசியல் அமைப்பை உருவாக்கிய பின்னர் சர்வஜன வாக்கெடுப்பினை நடத்த தயார் என தெரிவித்தார்.
அத்தோடு மக்களின் விருப்பம் இல்லாது நாம் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயாராக இல்லை. மக்களின் விருப்பதிற்கு அமையவே எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியும். மக்களின் விருப்பம் இல்லாது எதை செய்தாலும் அது மக்கள் விரோத செயற்பாடாகவே அமையும்.
குறிப்பாக தமிழ் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.ஒருசிலர் தமது தேவைக்காக முன்வைக்கும் கருத்துக்களை கருத்தில் கொண்டு செயற்பட முடியாது என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM