வெள்ளை மாளிகையின், நிருபர்கள் ஆணையத்தின் வருடாந்த விருந்துபசாரத்தில் கலந்து கொள்ளவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வரும் வெள்ளை மாளிகை நிருபர்கள் ஆணையத்தின் விருந்துபசாரத்தில், தான் கலந்து கொள்ள மாட்டேன் என தனது சமூக வலைத்தளம் மூலம் கருத்தொன்றை டிரம்ப் பதிவு செய்துள்ளார்.அத்தோடு குறித்த விருந்துபசாரத்தின் போது, அனைவருக்கும் இனிய மாலை வணக்கத்தை தெரிவிக்கும்படியும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் 1920ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் குறித்த விருந்துபசாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஹொலிவுட் நடிகர்கள் உள்ளிட்ட ஊடக பிரபலங்களும் பங்குபற்றுவர்.
இவ்வருடத்திற்கான விருந்துபசார தினமாக ஏப்ரல் 29ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனங்கள் வெள்ளை மாளிகையினுள் செய்தி சேகரிக்க டிரம்ப் தடை விதித்திருந்தார். மேலும் அமெரிக்காவின் எதிரிகளாக ஊடகத்தினர் இருக்கின்றனர் என கருத்தொன்றை தெரிவித்திருந்த நிலையில் தற்போது விருந்துபசாரத்தை புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM