டுரோன் கெமராக்களை அழிப்பதற்கு உயிர்கொல்லி கழுகுகளுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் விமானப்படை அறிவித்துள்ளது.
ஆளில்லா விமானங்கள் மூலம் படங்களை எடுத்து தக்குதல்கள் நடத்துதல் மற்றும் தீவிரவாத தாக்குதலுக்கு தேவையான தகவல்களை சேகரித்தல், போன்ற சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயப்படுத்தப்படும் டுரோன் கெமராக்களை இனங்கண்டு அழிப்பதற்காக, பிரான்ஸ் விமானப்படை கழுகுகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கியுள்ளது.
கடந்த ஐந்து வருடங்களாக டுரோன் கெமராவின் பாவனைகள் அதிகரித்துள்ள நிலையில், குறித்த கெமராக்களை கொண்டு ஏற்படுத்தப்பட்ட தாக்குதல் அழிவுகளும் அதிகமாக பதிவாகியுள்ளது. அதனால் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில், கெமராக்களை ஏந்திய டுரோன் விமானங்களை அழிப்பதற்கு கழுகுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல மாதங்களாக அளிக்கப்பட்ட பயிற்சியை தொடர்ந்து, குறித்த கழுகுகளை எதிர்வரும் மாதத்திலிருந்து சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக, பிரான்ஸ் விமானப்படை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM