கிறிஸ்தவ சமூகத்தினர் மீதான ஐ.எஸ்.ஸின் தாக்குதல்களையடுத்து எகிப்தின் வடக்கு சினாய் மாகாண கிறிஸ்தவக் குடும்பங்கள் இடம்பெயர ஆரம்பித்துள்ளனர். கடந்த மூன்று வாரங்களுக்குள் ஏழு கிறிஸ்தவர்கள் இலக்கு வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்தே இந்த முடிவுக்கு கிறிஸ்தவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சுயெஸ் கால்வாய் நகரான இஸ்மைலியாவில் உள்ள இவாஞ்சலிக்கல் தேவாலயத்தில் வழிபாடு நடத்தும் சுமார் 160 கிறிஸ்தவக் குடும்பங்களில் இதுவரை 100 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும், கல்வி கற்பதற்காக அங்கு தங்கியிருந்த 200 கிறிஸ்தவ மாணவர்களும் அவர்களுடனேயே வெளியேறிவிட்டதாக தேவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இருபத்தைந்து கிறிஸ்தவக் குடும்பங்கள் நேற்று தமது மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறினர்.
அப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களின் பெயர்களை இணையதளம் வாயிலாகவும் சுவரொட்டிகளாகவும் ஒட்டி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், அந்தப் பட்டியலின் படி பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்து வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM