சுற்றுலாத்துறைக்கான நிதி வீணாக செலவு செய்யப்பட்டது

19 Nov, 2015 | 11:01 AM
image

 சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான நிதியம்  கடந்த ஆட்சியில் வேறு விடயங்களுக்கு வீணாகச் செலவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதியமைச்சர் அருந்திக பெர்னாண்டோ. உனவட்டுன கடற்துறை உலகின் சிறந்த அழகிய கடற்துறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  பிரதியமைச்சர் தெரிவித்தார்.

 கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார். 
பிரதியமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில், 
இலங்கையில் உல்லாசப் பிரயாணத்துறையை ஊக்குவிப்பதற்காக தனியான ஒரு நிதியம் இருந்தது. ஆனால் கடந்த ஆட்சியில் இந்நிதியம் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக செலவு செய்யப்படவில்லை.
மாறாக வேறு அநாவசியமான விடயங்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த காலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சு பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் இணை அமைச்சாகவே செயற்பட்டது.
தற்போதைய ஆட்சியில் தான் சுற்றுலாத்துறைக்கென தனியான அமைச்சு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
எனவே இலங்கையின் 8 முக்கிய விடயங்களை முதன்மைப்படுத்தி சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பௌத்த மதம், கலை கலாசாரம், வரலாறு, திருவிழாக்கள், விளையாட்டுக்கள், கடற்கரை வன ஜீவராசிகள், இயற்கைச் சூழல் என முதன்மைப்படுத்தி வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் இலங்கை வருவதை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
அத்தோடு நாட்டில் தற்போது புதிதாக ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அவற்றிற்கு தேவையான மனித வளங்களை வழங்கும் விடயத்திலும் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதற்காக ஹோட்டல் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. ஹோட்டல்களுக்கு தேவையான மனித வளங்களை இதன் மூலம் வழங்க முடியும்.
அதேவேளை அமெரிக்காவின் ஊடக அமைப்பொன்று மேற்கண்ட கணிப்பீட்டுக்கு அமைய இலங்கையின் உனவட்டுன கடற்கரை அழகிய சிறந்த கடற்கரையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10