கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதற்கு அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
பரவிப்பாஞ்சான் மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பான காலந்துரையாடல் இன்று (23.02.2017) காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசஅதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்திருப்பதாகவும் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னர் காணிகளை விடுவிக்கவுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்ட பரவிப்பாஞ்சான் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைத்துள்ளது.
இராணுவத்தினர் வசமிருந்த காணிகளை விடுவிக்கு மாறு கோரி தொடர்ந்து நான்கு நாட்களாக பரவிப்பாஞ்சான் மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தம்மிடம் இருக்கும் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM