இலங்கையில் பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் மேம்பாட்டை பலப்படுத்தும் வகையில் தேசிய பெண்கள் ஆணையகம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பாராளுமன்றத்தில், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, குறித்த ஆணைய உருவாக்கம் தொடர்பாக முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சகத்துடன் இணைந்ததாக இலங்கை மகளிர் பணியகம், தேசிய மகளிர் குழு போன்ற அரச நிறுவனங்கள், பெண்கள் நலன்சார் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வருகின்றன. இருப்பினும் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளை தடுப்பதற்கான சட்ட அதிகாரமிக்க அமைப்பை உருவாக்குவதற்காகவே குறித்த ஆணையம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பெண்கள் ஆணையகம் சட்ட ரீதியான அதிகாரங்களை கொண்டதாக இருக்கும் எனவும், பெண்களின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அவர்களை வலுப்படுத்தும் செயல்பாடுகளை முன்னெடுப்பது போன்ற திட்டங்களை முன்னிலை படுத்தியதாக குறித்த ஆணையம் செயற்படவுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM