சீகிரியா மலைக்குன்றிலுள்ள ராஜமாளிகைக்கு செல்வதற்கான குன்றின் அடிவாரத்திலுள்ள வாயிலில் இருக்கும் இரு பாத அடையாளங்களும் சிங்கத்தின் பாதங்கள் அல்ல எனவும், அவை புலியின் பாதங்கள் என்றும், தம்புளை - ரங்கிரி விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் இத்தாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வாழ் மக்களை மட்டுமன்றி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் ஏமாற்றி, குன்றின் அடிவாரத்திலிருப்பது சிங்கத்தின் பாதமென்று நம்பவைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை உரிய திணைக்களம் சரிசெய்ய வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீகிரியவில் இருப்பது சிங்கத்தின் பாதங்கள் அல்ல என்ற தலைப்பின் கீழ், பேராசிரியர் இத்தாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரரினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குன்றின் உச்சியிலுள்ள ராஜமாளிகைக்குச் செல்வதற்கான வாயிலிலுள்ள மிருகத்தின் கால்களில், தலா மூன்று நகங்களை குறிக்கும் பாதங்களே காணப்படுவதாகவும், ஆனால் சிங்கத்தின் பாதத்தில் நான்கு விரல்கள் இருக்கின்றன என அவரின் கருத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்தோடு சிங்கத்தின் பாத அமைப்புக்கும், புலியின் பாத அமைப்புக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM