புதிய அர­சியல் அமைப்பு தனி­ஈ­ழத்தை அமைக்கும் அடிப்­ப­டையில் அமையும் 

Published By: MD.Lucias

06 Jan, 2016 | 07:41 AM
image

அர­சியல் அமைப்பு திருத்த ஆலோ­ச­னைக்­கு­ழுவில் புலி­களின் ஆத­ரவு உறுப்­பி­னர்­களை உள்­ள­டக்­கி­யுள்­ளனர். புதிய அர­சியல் அமைப்பு தனி­ஈ­ழத்தை அமைக்கும் அடிப்­ப­டையில் அமையும் என பொது­ப­ல­சேனா அமைப்பு குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

ஒற்றையாட்சி என்ற வார்த்­தை­யா­னது ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க ஆகி­யோ­ருக்கு விஷம் போன்­றது எனவும் அவ்­வ­மைப்பு தெரி­வித்­தது.

பொது­பல சேனா அமைப்­பினால் நேற்று கொழும்பில் நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவ் அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

அர­சியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்­டாலும் இன்­று­வரை அந்த மாற்று அர­சியல் திருத்தம் குறித்து எந்­த­வித வரை­பு­க­ளையும் முன்­வைக்­க­வில்லை. ஆனால் எவ்­வா­றான மாற்றம் வரும் என்­பது தொடர்பில் எமக்கு நன்­றா­கவே தெரியும். இப்­போதே இவர்கள் மாற்று அர­சியல் அமைப்பு திருத்­தத்தை தயா­ரித்து விட்­டனர். இந்த வரைபில் பிரி­வி­னைக்­கான அனைத்து கொள்­கை­களும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது என்­பதும் எமக்கு தெரியும்.

அதேபோல் இப்­போது நாடு மேற்­கத்­தேய நாடு­களின் அடி­மை­யாக மாறி­விட்­டது. அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா போன்ற நாடு­களின் முழு­மை­யான ஆதிக்கம் இன்று நாட்டை ஆக்­கி­ர­மித்­து­விட்­டது. அதேபோல் எமது இரா­ணுவம் தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டுகள் அனைத்தும் உண்மை என்ற நிலை­மைக்கு இந்த அர­சாங்கம் செயற்­பட ஆரம்­பித்­து­விட்­டது. அவ்­வா­றான நிலையில் நாட்­டையும் பிரித்து செயற்­பட இவர்கள் தயங்க மாட்­டார்கள்.

அர­சியல் அமைப்பு திருத்தும் தொடர்பில் ஆராயும் குழுவில் புலி­களின் ஆத­ரவு உறுப்­பி­னர்­களும் உள்­ள­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. நோர்வே, கனடா நாடு­களை சேர்ந்த புலம்­பெயர் அமைப்­பு­களின் உறுப்­பி­னர்கள் சில­ரையும் இந்த ஆலோ­சனைக் குழுவில் உள்­ள­டக்­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அவ்­வாறு இருக்­கையில் புலி­க­ளுக்கு தேவை­யான வகை­யி­லேயே இந்த அர­சியல் அமைப்பு அமையும்.

மேலும் ஒற்றையாட்சி இலங்கை என்ற அர்த்தம் தரும் வகையில் இந்த அர­சியல் அமைப்பு அமை­யாது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க ஆகி­யோ­ருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒற்றையாட்சி என்ற வார்த்தை விஷத்தை போன்றதாகவே இருந்தது. ஆகவே ஆட்சி மாற்றமும் சரியான தலைமைத்துவமுமே நாட்டை பாதுகாக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04