பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் புதிய மாணவர்கள் எட்டு பேரை நிர்வாணப்படுத்தி துன்புறுத்தி பகிடிவதைக்குட்படுத்திய 15 மாணவர் களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள் ளார்.
பகிடிவதை சம்பவம் நேற்று முன் தினம் இரவு மெகொட கலிகமுவ என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
விவசாயப் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் பேராதனை பொலிஸ் பிரதேசத்தில் மெகொட கலிகமுவ என்ற இடத்தில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகின்றனர். இவர்களில் சிலர் புதிய மாணவர்கள் 8 பேரை கடத்திச் சென்று இவ் வாடகை வீட்டில் வைத்து நிர்வாணமாக்கி பல வகையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதுடன் தாக்கியுமுள்ளனர்.
இப் பகிடிவதை குறித்து பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து அதிகாரிகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் குறிப்பிட்ட வாடகை வீட்டை சோதனையிட்டு பகிடிவதை புரிந்தவர்கள் என சந்தேகப்ப டும் 15 மாணவர்களை பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்களை கைது செய்த பொலிஸார் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை ஆஜர் செய்த போது நீதிவான் இவர்களை எதிர்வரும் மார்ச் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட 08 மாணவர்களும் தற்போது பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM