ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெறும் ஆசிய - பசுபிக் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை அமுல் செய்வது தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்க பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர நேற்று டோக்கியோ நகரை நோக்கி சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு பொலிஸ் மா அதிபர் பதவியில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப பதில் பொலிஸ் மா அதிபராக இருவர் பெயரிடப்பட்டுள்ளனர்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்ண ஆகிய இருவருமே இவ்வாறு பதில் பொலிஸ் மா அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 20 ஆம் திகதி அதிகாலை 22 ஆவது ஆசிய - பசுபிக் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை அமுல் செய்வது தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்க பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்றார். இந்த மாநாடானது நேற்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை இடம்பெறுகின்றது.
நேற்று 20 ஆம் திகதி முதல் இன்று 21 ஆம் திகதி வரையில் பொலிஸ் நிர்வாகத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்ணவும் 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை விஷேட பாதுகாப்பு விவகாரம் தொடர்பிலான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்கவும் பதில் பொலிஸ் மா அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM