வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நாம் விமான நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட அதிர வைக்கும் சிசிரிவி வீடியோ வெளியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன் வட கொரிய ஜனாதிபதியின் சகோதரர் கிம் ஜோங் நாம் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மலேசியா பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் சில பெண்கள் உட்பட பலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஐப்பான் தொலைகாட்சியொன்று கிம் ஜோங் நாம் கொல்லப்படும் சிசிரிவி காட்சியை வெளியிட்டுள்ளமை மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அதில், விமான நிலையத்தில் கிம் ஜோங் நாம்யிடம் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டிருக்கின்ற போது, திடீரென வியட்நாமை சேர்ந்த பெண் ஒருவர் நாமின் வாய்க்குள் எதையே வைத்து திணிக்கிறார்.
இதனையடுத்து, அந்த பெண் சாதாரணமாக அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார். எனினும், குறித்த பெண் தற்போது மலேசியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM