அமெரிக்க, மெக்ஸிக்கோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்பும் ட்ரம்ப்பின் அறிவிப்பை எதிர்த்து, மெக்ஸிக்கோ மக்கள் இன்று பாரிய மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
ஏற்கனவே தடுப்புச் சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கும் சியுடாட் ஜுவாரஸ் என்ற நகரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. உள்நாட்டு பொது அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள் அறிவித்த இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இவர்களது பங்களிப்போடு உருவாக்கப்பட்ட மனிதச் சங்கிலி சுமார் இரண்டு கிலோ மீற்றர் நீளத்துக்குத் தொடர்ந்தது
கைகளில் பூக்களுடன் வந்தவர்கள், அமெரிக்க, மெக்ஸிக்கோ எல்லைக்கருகே நின்று ட்ரம்ப்புக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
தடுப்புச் சுவர் மூலம் அமெரிக்காவுக்குள் போதை மருந்துக் கடத்தலையும், அகதிகள் நுழைவதற்கும் தடை ஏற்படுத்தும் அதேவேளை, இந்தச் சுவருக்கான நிதியை மெக்ஸிக்கோவின் தலையில் சுமத்த ட்ரம்ப் முயற்சிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
“தடுப்புச் சுவர் எழுப்புவதென்பது முட்டாள்தனமான திட்டம். இதன்மூலம் போதை மருந்து அமெரிக்காவுக்குள் நுழைவதையோ, அகதிகள் நுழைவதையோ தடுக்க முடியாது. இது முழுக்க முழுக்க இனவாதப் போக்கை வலியுறுத்தும் அமெரிக்க ஜனாதிபதியின் வெறுப்பின் அடையாளச் சின்னம் மட்டுமே” என்று ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM