ஜெயலலிதா ஆதரவு ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் இன்று தமிழக சட்டசபையில் பதவியைக் கைப்பற்றுவதற்கான பலப்பரீட்சையில் இறங்கவுள்ளனர். இன்னும் சில நிமிடங்களில், அதாவது 11 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் யார் வெல்வார்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு தமிழக அரசியல் நிலைமை இருக்கிறது.
இந்த நிலையில், தற்போது தமிழக சட்டப்பேரவைக்கு அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் வருகை தந்துவிட்டனர். குறிப்பாக, பழனிச்சாமி தலைமையிலான உறுப்பினர்கள் கூவத்தூரில் இருந்து நேரடியாக சட்டசபை வந்து சேர்ந்தனர்.
இதேவேளை, சசிகலாவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பே தமிழக சட்டசபை உறுப்பினர்கள் மத்தியில் தோன்றியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. எதிர்க்கட்சியான தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின், பன்னீர்செல்வத்துக்கே ஆதரவளிப்பது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுபோலவே, சற்று முன்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், தமது சட்டசபை உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, சட்டசபை வளாகத்துக்குள் நுழைய முயன்ற ஸ்டாலின் வாகனம் சோதனையிடப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சட்டசபை வளாக வாயிலில் இருந்து பொலிஸாருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி சட்டசபைக்குள் நுழைந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM