அருகி வரும் மனிதக் குரங்கை சுட்டு, வெட்டி, சமைத்துச் சாப்பிட்ட மூவர் கைது

Published By: Devika

17 Feb, 2017 | 01:23 PM
image

இந்தோனேசியாவில், அழியும் நிலையில் உள்ள உராங்உட்டான் வகை மனிதக் குரங்கொன்றைச் சுட்டுக்கொன்று, வெட்டி சமைத்துச் சாப்பிட்ட மூவரை பொலிஸார் கைது செய்தனர்.

பாம் ஒயில் தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இவர்கள், அப்பகுதியில் திரிந்துகொண்டிருந்த மனிதக் குரங்கைச் சுட்டுக் கொன்றனர். பின்னர் அதைத் துண்டுகளாக வெட்டி சமைத்துச் சாப்பிட்டனர். இந்தச் சம்பவம் ஊடகங்களில் படங்களுடன் வெளியானதையடுத்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர்.

சாட்சிகள் சிலரை விசாரித்ததில் சந்தேக நபர்கள் மூவரையும் பொலிஸார் கைது செய்தனர். குற்றம் நடைபெற்றதாகக் கருதப்படும் இடத்தில் இருந்து மனிதக் குரங்கின் எலும்புகளையும், ஊழியர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து காய்ந்த நிலையில் மனிதக் குரங்கின் இறைச்சியையும் பொலிஸார் கைப்பற்றினர்.

சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமிடத்து, அவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை கிடைக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10