செவ்வாய் கிரகத்தில் நகரமொன்றை அமைப்பதற்கு சுமார் 100 வருட திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த திட்டமானது 2117ஆம் ஆண்டு நடைமுறைக்கு வருமென ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.
குறித்த திட்டம் குறித்து அந்நாட்டு துணை ஜனாதிபதி ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் மற்றும் அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 2117 ஆம் ஆண்டு செவ்வாயில் முதலாவது நகரத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்தோடு பூமியில் வசிக்கும் மக்களை அனைத்து வசதிகளுடன் செவ்வாய் கிரகத்தில் தங்க வைத்து, அங்கும் ஓர் உயிரின வாழிடம் ஏற்படுத்துவதற்கான, நகரமைப்பு திட்டத்தின் மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பூமிக்கு அடுத்தபடியாக, மனிதர்கள் வாழ ஏற்புடைய தன்மைகள் செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு கிரகத்தின் சராசரி வெப்பநிலை 63 செல்சியஸ் பாகை என்றும், அது ஒருமுறை சூரியனை சுற்றி வருவதற்கு 687 நாட்கள் எடுக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூமியிலிருந்து 2021 ஆம் ஆண்டளவில் மனிதர்கள் சென்று ஆய்வு நடத்த உள்ளார்கள். குறித்த ஆய்விற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சார்பிலும், ஒரு விண்கலம் உருவாக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM