புகைப்படம் எடுக்கும் இராணுவம் ; 17 ஆவது நாளாகவும் துணிவோடு போராடும் கேப்பாப்புலவு மக்கள்

Published By: Priyatharshan

16 Feb, 2017 | 05:59 PM
image

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்க்கவேண்டுமென கோரி கடந்த 17 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களையும் செய்தி சேகரித்துவரும் ஊடகவியலாளர்களையும்  ஆதரவு  தெரிவித்து வரும் சிவில் அமைப்புகள் மற்றும் மக்களையும் எதிரே உள்ள விமானப்படை முகாமில் உள்ள விமானப்படையினரும் இராணுவப் புலனாய்வாளர்களும் தொடர்சியாக புகைப்படம் மற்றும் காணொளி பதிவுகள் என்பனவற்றை எடுத்து அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இராணுவத்தினரின் இந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத கேப்பாபுலவு பிலக்குடியிருப்புமக்கள் தமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இராணுவத்தினர் புகைப்படம் எடுப்பதாலோ  எம்மை மிரட்டுவதாலோ நாம் போராட்டத்தை  கைவிடப்போவதில்லை என்றும் தொடர்ந்து எமது போரட்டம் எமது மண்ணில் கால் பாதிக்கும் வரை தொடரும் என்றும்  போராட்டத்திலீடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள  விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக  கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் கொட்டும் மழையையும்  பொருட்படுத்தாது சிறுவர்கள்இகுழந்தைகள் இமுதியவர்கள் இபெண்கள்இஎன  அனைவரும்  கடந்த 31.01.2017 தொடக்கம்  தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துவருகின்றனர்.  

அத்தோடு இன்றையதினம்  முல்லைத்தீவு ்கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுசங்கத்தினர்  மற்றும் முல்லைத்தீவு அமரா பெண்கள்  தலைமைதாங்கும்  குடும்பத்தினர் சங்கம்  மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினர் ஆகியோர்   போராட்டத்துக்கு  ஆதரவாக போர்டடக்களத்துக்கு வருகைதந்து மக்களுக்கான தமது ஆதரவினை வெளியிடடனர்.

அத்தோடு இன்றைய தினம் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்  சித்தார்த்தன்   மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கந்தையா சிவநேசன்  ஆகியோர் வருகைதந்து மக்களுக்கான தமது ஆதரவினை தெரிவித்தனர்.

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு கிராமத்தில் 84குடும்பங்களுக்கு சொந்தமான 50ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை கையகப்படுத்தி விமானப்படைத்தளம் அமைத்துள்ள விமானப்படையினர் அதனை பலப்படுத்தி வேலிகள் அமைத்து மக்கள்  செல்லமுடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். 

இந்த நிலையில் கடந்த மாதம் 31ஆம் திகதி காணிகள் அளவிடப்படும் எனவும் காணிகளுக்கு சொந்தமான மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வருமாறும் கேப்பாபுலவு கிராமசேவகர் அறிவித்தல் விடுத்திருந்த நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்திருந்தமக்கள் நாள்முழுவதும் வீதியில் காத்திருந்த போதும் அதிகாரிகள் எவரும் காணிகள் அளவிட வருகைதந்திருக்கவில்லை நீந்த நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் அன்றைய தினம் முதல் தாம் தமது சொந்த நிலங்களில் காலடி எடுத்து  வைக்கும் வரை போராட்டம்  தொடருமென கூறி தொடர் போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.

அத்தோடு இன்றும் பல பிரதேசங்களில் இருந்து மக்களும்இசிவில் அமைப்புகளும் வருகைதந்து மக்களுடன் கலந்துரையாடியதோடு பல உதவிகளையும் வழங்கி சென்றதோடு  மக்களுக்கான ஆதரவும் பல்வேறு வழிகளில் அதிகரிப்பதை அவதானிக்க முடிகின்றது. 

 இந்தப்போராட்டக்   களத்தில் உள்ள மாணவர்கள் வீதி ஓரத்திலேயே தமது பாடசாலையில் வழங்கப்பட்ட  வீட்டு வேலைகளை செய்வதோடு அனைவரும் இணைந்து தமது  கல்விநடவடிக்கைகளை மேற்கொள்வதனை அவதானிக்க முடிகின்றது. மேலும் இன்றும்  (16இ02)   ஆசிரியர்கள் இணைந்து போராட்ட   களத்திலே உள்ள மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளையும் உளவள ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளையும்   மேற்கொண்டனர் .

போராடத்தில் ஈடுபடும் மக்களுக்கான உணவு  மற்றும் இதர உதவிகளை அயல் கிராம மக்களும் இளைஞர்களும் சிவில் சமூக அமைப்புகளும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17