தெற்காசியக் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் சம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் மோதிய இந்தியா 2–1 என்ற கோல்கள் கணக் கில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த சம்பியன் பட்டத்துடன் 7ஆவது முறையாக இந்தியா சம்பியனாகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை 12 ஆவது தெற்காசியக் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரை நடத் தும் வாய்ப்பு பங்களாதேஷிற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டாம் திகதி நடைபெற்ற சாவ் நிர்வாகக் குழு கூட்டத்திலேயே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
சாவ் தலைவரான காசி சலாவூதீன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாததினால், பிரதி தலைவராக செயற்பட்ட இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய ஊடக மற்றும் தொடர்பாடல் அதிகாரியுமான ரஞ்சித் ரொட்ரிகோ கூட்டத்தை வழிநடத்தினார்.
இதில் பல தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. அதன்படி மகளிருக்கான தெற்காசியக் கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. அத்தோடு 2017ஆம் ஆண்டுக்கான தெற்காசிய கால்பந்து போட்டிகளை பங்களாதேஷ் நடத்துகிறது.
அதேவேளை நடைபெற்றுமுடிந்த தெற்காசியகால்பந்து சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் பிரதம விருந்தினராகவும் ரஞ்சித் ரொட்ரிகோ கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM