சிரியாவில், இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதக் குழுவுக்கு எதிரான யுத்தத்தில் போரிட, முதன்முறையாக தனது தரைப்படையையும் அனுப்பிவைக்கவுள்ளது அமெரிக்கா. எனினும், ட்ரம்ப்பின் சம்மதம் கிடைத்ததன் பின்னரே தரைப்படை சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரியவருகிறது.
ஐ.எஸ். இயக்கத்தை ஒரு மாத காலத்தினுள் அழித்துவிடுவதாகச் சூளுரைத்த ட்ரம்ப், அதற்கான திட்டம் ஒன்றை வரைவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சைப் பணித்திருந்தார். அதன்படி திட்டம் ஒன்று வரையப்பட்டிருப்பதாகவும், அதில் தரைப்படையை அனுப்பி வைப்பதையும் ஒரு அம்சமாகச் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டம் ட்ரம்பின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்படும்போது, அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துவிட்டால் அமெரிக்க தரைப்படை சிரியாவுக்குள் நுழையும் என நம்பப்படுகிறது.
இதுவரை காலமாக, சிரியா-குர்திஷ் கூட்டுப்படைகளுடன் அமெரிக்க விமானப் படை மட்டுமே இணைந்து போரிட்டு வந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM