பேர்ப்பெச்சுவல் ட்ரெஷரிஸ் தனியார் நிறுவனம் ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளை, வாங்குவதற்கான சதித்திட்டமொன்று காணப்படுவதாக, ஒன்றிணைந்த எதிரணி குற்றச்சாற்றொண்டை முன்வைத்துள்ளது.
வாங்குபவரின் உண்மையான அடையாளத்தை மறைத்து, மற்றொரு நிறுவனத்தினைப் பயன்படுத்தி, ஸ்ரீ லங்கன், மிஹின் லங்கா விமான சேவைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களை, பேர்ப்பேச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனம் கொள்வனவு செய்ய முயல்கிறதாக, ஒன்றிணைந்த எதிரணி சார்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அண்மையில் அரச பொது முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன, டெக்சாஸ் பசுபிக் நிறுவனம் இலங்கையின் இரண்டு விமான நிலையணைகளையுந் கட்டமைக்கு பணிக்கு தகுதியான நிறுவனமாக அறிவிக்கப்பட்டதாகவும், குறித்த அமெரிக்க நிறுவனம், இலங்கையின் முன்னாள் மத்திய வங்கி ஆளுனரான அர்ஜுன மகேந்திரனின் பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய, பேர்ப்பெச்சுவல் ட்ரெஷரிஸ் தனியார் நிறுவனத்துடனான இணைப்பை கொண்டுள்ள நிறுவனம் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் பெரியளவில் இயங்குகின்ற சில அரச நிறுவனங்களை, பேர்ப்பெச்சுவல் நிறுவனம் வாங்க முயலுகின்றது என்பதற்கு, போதுமான காரணங்கள் காணப்படுவதாகவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM