அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதான முதலீட்டைத் தாமதிப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவிவரும் அரசியல் சூழலே சீனாவின் இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் சீனா இடையிலான கடல்வழி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் முகமாக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீத பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கடந்த டிசம்பர் மாதம் சீனா கையெழுத்திட்டது. இது தவிர, அம்பாந்தோட்டையில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தொழிற்பேட்டை ஒன்றை அமைக்கவும் சீனா எண்ணியிருந்தது.
இந்த ஒப்பந்தத்தின்படி, கடந்த ஜனவரி 7ஆம் திகதி முதலீட்டுக்கான நிதியை சீனா வழங்கியிருக்க வேண்டும். எனினும், துறைமுகப் பங்குகளை விற்கவும், தொழிற்பேட்டைக்கான நிலத்தை சீனா கையகப்படுத்துவதற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் வர்த்தக அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருவதையடுத்து, இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய சீனா தயங்குவதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அம்பாந்தோட்டை துறைமுகம் மீதான தமது முதலீட்டை தாமதப்படுத்த சீனா எண்ணியுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகப் பங்குகளை வாங்கும் அதேவேளை, தொழிற்பேட்டைக்கான நிலத்தைக் கையளிக்க வேண்டும் என்று சீனா கேட்டிருந்ததாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது பற்றி கருத்து வெளியிட்ட இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஸியான்லியாங், “தொழிற்பேட்டை இல்லாமல் துறைமுகப் பங்குகளை மட்டும் வாங்குவதன் மூலம் சீனாவுக்கு என்ன லாபம் கிடைத்துவிடப்போகிறது? பங்குகளை வாங்க வேண்டும் என்றால் தொழிற்பேட்டையும் அவசியம்” என்று தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினை குறித்து அரசும் எதிர்க்கட்சிகளும் பேசி சுமுகமான தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்று கூறியுள்ள சீனா, எதிர்வரும் மே மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீன விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதால், அதுவரை காத்திருக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM