இரண்டரைக் கோடி ரூபா காப்புறுதி ஈட்டுப் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தத்தெடுத்த மகனைக் கொலை செய்த வெளிநாடு வாழ் இந்தியத் தம்பதியினர் மீது டெல்லி பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோபால் (13) என்ற சிறுவன், தனக்கு அறிமுகமான நிதீஷ் மற்றும் இருவருடன் டெல்லி ராஜ்கோட்டில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தான். அப்போது, மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நால்வர் கோபாலைக் கத்தியால் குத்தியதுடன் இருவரைத் தாக்கிவிட்டுத் தப்பியோடியது. நிதீஷ் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.
பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கோபால், மறுநாள் உயிரிழந்தான். இதையடுத்து நிதீஷ் மீது சந்தேகம் ஏற்படவே, பொலிஸார் அவரை விசாரித்தனர். அதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கடந்த சில மாதங்களாக லண்டனில் வாழ்ந்து வந்த நிதீஷ், அண்மையிலேயே இந்தியா திரும்பியிருந்தார். லண்டனில், ஆர்த்தி லோக்நாத் மற்றும் கன்வால்ஜித்சிங் ரய்ஜாதா என்ற இந்தியத் தம்பதியருடன் நிதீஷுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் பணக்காரராக வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர்களுக்கு நிதீஷ் ஒரு யோசனையைச் சொன்னார்.
அதன்படி, இந்தியாவுக்கு வந்த ஆர்த்தி மற்றும் அவரது கணவர், கோபாலை தமது மகனாகத் தத்தெடுத்துக்கொண்டனர். அவனை சுமார் இரண்டரைக் கோடி ரூபா மதிப்பில் காப்புறுதியும் செய்து வைத்தனர். பின்னர், ஏற்கனவே போட்ட திட்டத்தின்படி, சில நாட்களின் பின் கோபாலை நிதீஷின் பொறுப்பில் விட்டுவிட்டு தம்பதியர் லண்டன் சென்று விட்டனர்.
சிறிது காலம் காத்திருந்த நிதீஷ், கூலிப்படையினரை ஏவி கோபாலைக் கொலை செய்தார். தன் மீது சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, சம்பவ நேரத்தில் மேலும் இருவரையும் அழைத்துச் சென்றதோடு, அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப் பணித்திருக்கிறார்.
தற்போது, லண்டன் தம்பதியினரை இந்தியா வரவழைக்கும் பணியில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM