சொத்துக் குவிப்பு வழக்கு ஏறக்குறைய ஒரு முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரமும் வெளியாகியுள்ளது.
அதில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து வீடே சொத்துக் குவிப்புக்கான சதித் திட்டங்களைத் தீட்டும் மையப்புள்ளியாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு மேல், முறையற்ற விதத்தில் சேகரிக்கப்பட்ட பணத்தைக்கொண்டு பல்வேறு நிறுவனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவ்வாறு வாங்கப்பட்ட நிறுவனங்கள் போயஸ் தோட்டத்து வீட்டில் இருந்தே இயக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த நிறுவனங்கள் பற்றி ஜெயலலிதா அறிந்திருக்கவில்லை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருமே ஜெயலலிதாவுடன் போயஸ் தோட்டத்து வீட்டிலேயே தங்கியிருந்ததால், அவர்களுக்கும் இந்தக் குற்றத்தில் பங்கிருக்கிறது என்பது வெளிச்சமாகிறது. இவர்கள் மூவரும் ஜெயலலிதாவுக்கு இரத்தச் சொந்தங்கள் அல்ல. எனவே, சதியாலோசனைகளை நிறைவேற்றவும் நிழல் வேலைகளைச் செய்யவும் இவர்கள் அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
ஜெயலலிதாவின் வங்கிக் கணக்குகளில் இருந்து மேற்படி மூவரது கணக்குகளுக்கும் நிழல் நிறுவனங்களின் கணக்குகளுக்கும் பணம் வாரிக் கொடுக்கப்பட்டிருப்பதானது, இந்தச் சொத்துக் குவிப்பில் இவர்களது கூட்டு முயற்சி பெரும் பங்கு வகித்திருப்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM