நாட்டில் ஒருபோதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாத வகையிலும், மக்களுக்கு சலுகை விலையில் அரிசியைப் பெற்றுக்கொடுப்பதற்கான, ஒரு முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி இறக்குமதியாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாவது:
நாட்டில் அரிசி கையிருப்பை பேணும் வகையில் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை அரசாங்க களஞ்சியசாலைகளில், களஞ்சியப்படுத்திவைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கைத்தொழில் மற்றும் வாணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளார்.
அத்தோடு நாட்டில் உள்நாட்டு மற்றும் இறக்குமதிசெய்யப்பட்ட அரிசி வகைகளுக்கு, குறைந்தளவான நிர்ணய விலையை தீர்மானிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பணித்துள்ளார்.
மேலும் அரிசி ஆலை உரிமையாளர்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் மற்றும் அரிசி விலை தொடர்பான பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் தொடர்பான கலந்தாலோசனைகளும் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன், உள்ளிட்ட அரச அதிகாரிகள் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM