நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சுமார் 12 வருடங்களுக்கு குறைவான சேவைக்காலத்தை உடைய, விசேடதேவையுடைய பாதுகாப்பு படையினருக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்திற்கு அமைவாக முப்படையை சேர்ந்த 2261 பேருக்கும், பொலிஸ்படையை சேர்ந்த 136 பேருக்கும், ஓய்வூதியம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரைகாலமும் 12 வருடங்கள் சேவைகாலத்தை உடைய, படையினருக்கே ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் 12 வருடத்திற்கும் குறைவான சேவைக்காலத்தை உடைய படையினருக்கு, முதல் முறையாக குறித்த ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த திட்டத்தின் முதற்கட்டமாக சுமார் 150 படையினருக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்வொன்று, ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில், பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன மற்றும் ஏனைய பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM