இரண்டாண்டுகளாகக் கருவுற்றிருந்த பெண் ஒருவர் ஆட்டுக்குட்டியொன்றை ஈன்ற சம்பவம் நைஜீரியாவை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
நைஜீரியாவின் கிராமம் ஒன்றைச் சேர்ந்த இந்த பெயர் குறிப்பிடப்படாத பெண், கருவுற்று பத்து மாதங்கள் தாண்டியபோதும் பிரசவ வலி வராததால் பிரசவத்துக்காகக் காத்திருந்தார் (!). ஆனால், இரண்டு வருடங்கள் கடந்தபோதும் அவருக்குப் பிரசவ வலி ஏற்படவில்லை.
இதனால் பயந்து போன அந்தப் பெண், தமது கிராம சுகாதாரப் பணிமனை ஊழியர்களிடம் உதவி கேட்டார். அதற்கிணங்க அந்தப் பணிமனையைச் சேர்ந்த ஊழியர்கள் குறித்த பெண் குழந்தையைப் பிரசவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
ஆனால், குழந்தைக்குப் பதிலாக ஆட்டுக்குட்டியொன்றை அந்தப் பெண் ஈன்றதைக் கண்டு அந்த ஊழியர்கள் அதிர்ச்சியுற்றனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு அக்கிராம மக்கள் மற்றும் ஊடகத்துறையினர் திரண்டனர். அங்கே, இரத்த வெள்ளத்தில், புத்தம் புதிதாகப் பிறந்த ஆட்டுக்குட்டியொன்று சலனமின்றிக் கிடப்பதைக் கண்டு வியந்தனர்.
ஆனால், பிறந்த அந்த ஆட்டுக்குட்டி தற்போது உயிருடன் இருக்கிறதா, இல்லையா என்ற தகவல்கள் அறியத்தரப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM