தனது ஆதரவாளரை முதலமைச்சராக அறிவிக்க சசிகலா முஸ்தீபு!

Published By: Devika

14 Feb, 2017 | 11:58 AM
image

சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதையடுத்து, சசிகலாவின் ஆதரவாளர்களில் ஒருவர் முதலமைச்சராக அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீர்ப்பு வெளியாகும்போது காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களுடன் அவசர ஆலோசனை நடத்திய சசிகலா, தனக்கான தீர்ப்பு எந்த விதத்திலும் கட்சியில் தனக்கு உள்ள செல்வாக்கைச் சரித்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றபோது, தனது தீவிர விசுவாசியான ஓ.பன்னீர்செல்வத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எவ்வாறு தேர்ந்தெடுத்தாரோ, அதைப்போலவே தனது தீவிர அபிமானியான ஒருவரையே முதலமைச்சராக அறிவிப்பது என்று சசிகலா எண்ணியுள்ளார்.

இதன்படி, கே.ஏ.செங்கோட்டையனையும் மற்றொருவரையும் சசிகலா தெரிவுசெய்திருப்பதாகவும், அவர்கள் இருவரில் ஒருவர் முதலமைச்சராக அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இவர்களுள் செங்கோட்டையனுக்கே வாய்ப்புகள் அதிகம் என்றும் நம்பப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17