அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்காவின் ரஷ்ய தூதரோடு மேற்கொண்ட தொலைபேசி தொடர்புகளில் நிர்வாகத்திற்குதவறான தகவல்களைத் வழங்கினார் என்று எழுந்த குற்றச்சாட்டுகளையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னரே, அமெரிக்கா, ரஷ்யா மீது விதித்திருக்கும் தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்திற்கு எதிரான வகையில், ரஷ்ய தூதரோடு கலந்துரையாடியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜெனெரல் கெய்த் கெல்லோக் தற்காலிக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டனில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பொறுப்பேற்று ஒரு மாதத்திற்குள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் இராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM