மண் மீட்புப் போராட்டத்தில் தொடர்சியாக ஈடுபட்டு வருகின்ற கேப்பாப்புலவு மக்களுக்கு காலம் தாழ்த்தாது உடனடியாகத் தீர்வு வழங்குமாறு கோரி ஐனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வடக்கு மாகாண சபையால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர்களும் ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் கடந்த மாகாண சபை அமர்வின் போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் வடக்கு மாகாண சபையினரும் நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் போராட்டத்திலும் கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய நேற்று முன்தினம் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் நேரடியாக விஐயம் செய்திருந்தனர். இதனையடுத்து நேற்றையதினம் மாகாண சபையில் விசேட கலந்துரையாடலொன்றையும் மாகாண சபையில் மேற்கொண்டிருந்தனர்.
இதன் பின்னர் அந்த மக்களின் போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கான தீர்வை விரைந்து வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் கையெழுத்திட்டு ஐனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு கையெழுத்திட்ட கடிதத்தையும் அனுப்பி வைத்தனர்.
இதே வேளை கடந்த இரண்டு வாரகாலமாக பல்வேறு கஸ்ர துன்பங்களுக்கு மத்தியிலும் தமது காணிகளை தம்மிடமே மிளக் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி போராடி வருகின்ற மக்களிற்கு உரிய தீர்வை இனியும் காலம் தாழ்த்தாது தீர்வைப் பெற்றுக் கொடுக்க வெண்டுமென பல தரப்பினர்களும் கோரிக்கை விடுத்திருக்கின்ற நிலையில் அத்தகைய கோரிக்கைகளை மீளவும் வலியுறுத்தி மாகாண சபையினர் ஐனாதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM