இங்கிலாந்து “ஏ“ அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை “ஏ“ அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து ஏ இலங்கை ஏ அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்தப் போட்டித் தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை ஏ அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பெயர் விபரங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கும் இழுபறி நிலைகளுக்கும் மத்தியில் இன்று இலங்கை ஏ அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வாவின் பெயரை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இக் குழாமில் 7 துடுப்பாட்டவீரர்களும் 4 வேகப்பந்து வீச்சாளர்களும் 4 சுழற்பந்து வீச்சாளர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து ஏ அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை ஏ அணி குழாம் வருமாறு,
தனஞ்சய டி சில்வா ( அணித் தலைவர் ), திமுத்து கருணாரத்ன, உதார ஜயசுந்தர, சதுன் வீரக்கொடி ( விக்கெட் காப்பாளர் ), சரித் அசலன்க, ரோஷேன சில்வா, லகிரு கமகே, கசுன் ராஜித்த, ரொன் சந்திரகுப்தா, கசுன் மதுஷங்க, அசித்த பெர்னாண்டோ, டில்ருவான் பெரேரா, அமில அப்பொசோ, ஜெப்ரி வெண்டர்சே, மலிங்க புஷ்பகுமார ஆகியோர் இக் குழுாமில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM