யுத்தக் குற்ற விவகாரத்தில் அரசாங்கம் எந்த வகையிலும் அவசரப்பட மாட்டாது. குறிப்பாக யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பிலான விசேடநீதிமன்றம் அமைக்கும் பணிகளில் அரசாங்கம் அவசரம் காட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்துதல் தொடர்பில் இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளதாவது:
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் என்ன நேர்ந்தது என்பது மதிப்பீடு செய்யப்பட வேண்டியது முதன்மையானதாக காணப்படுகின்றது. எனவே நிலைமைகளை மதிப்பீடு செய்ததன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். அதனால் முதலாவதாக நிலைமைகளை மதிப்பீடு செய்தல் மிகவும் அவசியமாகும்.
எந்தவொரு செயற்பாட்டையும் செய்யுமாறு எவரும் உத்தரவு எமக்கு பிறப்பிக்கவில்லை. பிரேரணை அமுலாக்கமானது கூட்டுச் செயற்பாடாகவே அமையும்.
புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மக்களினதும் கருத்துக்களை அறிந்து அதன் அடிப்படையில் திருத்தங்கள் செய்யப்படும். இது தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நான் ஆற்றவுள்ளேன்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பரந்துபட்ட விவாதங்கள் ஊடாக புதிய அரசியலமைப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பில் அரசியலமைப்பு துறைசார் நிபுணர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் ஆகியோருக்கு இடையில் விவாதங்கள் நடத்தப்படவுள்ளன. அதன் பின்னரே புதிய அரசியலமைப்பு தேவையா? அல்லது தற்போதைய அரசியலமைப்புக்கு புதிய ஏற்பாடுகளை சேர்க்கப்படுமா என்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படும்.
இதேவேளை புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் உள்ளீர்க்கப்படுமா? அல்லது நீக்கப்படுமா என்ற எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் விவாதங்கள் மற்றும் ஆலோனைகள் நடத்தப்பட்ட பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கைக்கு அதிகாரத்தை பகிரும் செயற்பாடுகளில் நீண்ட அனுபவம் காணப்படுகின்றது என்றும் எனினும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் முறையான ஆய்வுகளை செய்த பின்னர் இறைமை மற்றும் அக்கறைகளைக்கொண்டே முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM