இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தும் புலம்பெயர் இலங்கையர்கள், தாய் நாட்டின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டிற்கு சிறப்பாக உதவ முடியும் என இலங்கையின் ஐ.நாவிற்கான வதிவிட பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நல்லிணக்க மேம்பாட்டிற்கும், அபிவிருத்தியிற்கும் புலம்பெயர் இலங்கையர்கள், சிறப்பாக உதவ முடியும் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெனிவாவிலுள்ள, இலங்கையின் ஐ.நா தூதரகத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்ச்சிகளின் பொது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையை சுபீட்சமான நாடாக மாற்றுவதற்கு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், அதிகளவிலான ஈடுபாட்டை வெளிப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கமானது நிலைபேறான சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே இலங்கையில் வறுமை ஒழிப்பு செயற்பாடுகளுக்கு புலம்பெயர் இலங்கையர்களின் பங்கு அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM