தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவை பிணையில் விடுதலை செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பேச்சாளருமான ரஞ்சித் டி. சொய்சா நேற்று வீரகேசரி வாரவெளியீட்டுக்கு தெரிவித்துள்ளார்.
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரை பிணையில் விடுதலை செய்யக்கோரியே மேற்படி போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
அதனடிப்படையில் இன்று கட்டுநாயக்கவில் போராட்டம் நடைபெறவுள்ளதுடன், நாளை நுவரெலியாவிலும் 15 ஆம் திகதி அனுராதபுரத்திலும் அதனைத்தொடர்ந்து இரத்தினபுரி, நாத்தாண்டியா, குருணாகலை, ஹோமாகம, பிலியந்தலை, கொலன்னாவை ஆகிய இடங்களில் 18 ஆம் திகதி வரை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன. மேலும், எதிர்வரும் 19 ஆம் திகதி கதிர்காம ஆலயத்திலும் சீனிகம ஆலயத்திலும் தேங்காய் உடைத்து விசேட வழிபாடுகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM