எகிப்து அலெக்சாண்டிரியா நகரை சேர்ந்தவர் எமன் அஹ்மத் என்ற 36 வயது நிரம்பிய இவர் 500 கிலோ எடையுடன் உலகிலேயே அதிக எடையுடைய பெண் என அடையாளம் காணப்பட்டார்.
இவர் கடந்த 25 வருடங்களாக வீட்டை விட்டு வெளியில் செல்ல இயலாமல் தனது படுக்கையில் வாழ்க்கையினை கழித்து வந்துள்ளார்.
அவர் உடல் எடையை பற்றி அறிந்த இந்தியாவின் மும்பையை சேர்ந்த வைத்தியர்கள் உடல் எடையை சத்திர சிகிச்சையின் மூலம் குறைக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து எமனுக்காக பிரத்யோகமாக செய்யப்பட்ட படுக்கையில் அவர் ஏற்றப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு வரும் விமானத்தில் மிகவும் சிரமம் பட்டு ஏற்றப்பட்டார்.
அவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு செயற்கை வாயு சிலிண்டர்கள், அதிர்வு கருவி மற்றும் முக்கிய சாதனங்கள் விமானத்தில் அவருக்காக வைக்கப்பட்டிருந்தன.
அவருக்கு நுரையீரல் இரத்த குழாய் அடைப்பு ஏற்ப்பட வாய்ப்பிருந்ததால் அவர் பத்திரமாக அழைத்து வரப்பட்டார்.
மும்பை இன்று வந்து சேர்ந்த குறித்த பெண்ணிற்கு சிறப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.விரைவில் அவருக்கு சிகிச்சை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM