மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் (சைட்டம்) பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் சமீர சேனாரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சமீர சேனாரத்ன திடீரென வெளிநாட்டுக்கு சென்றுள்ளமையானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீர சேனாரத்ன கடந்த 6 ஆம் திகதி இரவு பல்கலையில் இருந்து வீடு திரும்பும் போது, கல்லூரியில் இருந்து சுமார் 750 மீற்றர் தூரத்தில் உள்ள சந்திரிகா குமாரதுங்க மாவத்தைக்கு அருகில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்து இரு இனந்தெரியாத நபர்கள் சமீர சேனாரத்ன மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்தனர்.
எனினும் வைத்தியர் சமீர சேனராத்னவுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சிறப்பு பொலிஸ் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, சம்பவ தினத்தன்று சமீர அணிந்திருந்த ஆடைகளை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர்கள் நேற்று பரிசோதனைக்காக பெற்றுக் கொண்டிருந்தனர்.
'சைட்டம் நிறுவனத்தில் இருந்து விலகுமாறும் இல்லா விட்டால் கொலை செய்யப்படுவேன் என தனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் இறுதியாக தொலைப்பேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திய நபர் “நான் எமன் பேசுகிறேன். உன்னை கொலை செய்ய போகிறேன்' என அச்சுறுத்தல் விடுத்ததாகவும் சமீர சேனராத்ன தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
எனினும் சில தரப்பினர் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒரு நாடகம் என குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று சமீர சேனராத்ன திடீரென ரஷ்யாவிற்கு பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM