புதிய அரசியலமைப்பை உருவாக்கி, அதன் பிறகு மக்களின் ஆதரவை பெறுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பது அரசின் முதல் கடமை என்றும், அது குறித்த சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவது இரண்டாவது கடமை என்று, சபை முதல்வரும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பிற்குட்படுத்தப்பட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும். எனவும் அது தொடர்பான பொது தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்களுக்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ள கருத்துக்களே அரசின் நிலைபாடா? என விமல் வீரவன்ச வினவிய கேள்விக்கு பதிலாகவே அவர் இதனை இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசியுள்ள அவர் அரசியலமைப்பு திருத்தத்துக்கான யோசனைகளை கையளிக்குமாறு சகல கட்சிகளிடமும் கோரப்பட்டது. சில கட்சிகள் முன்வைத்துள்ளன. இன்னும் சில கட்சிகள் அவர்களது யோசனைகளை முன்வைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே, அரசியலமைப்பின் 13 ஆவது சட்டத்திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வை வழங்குவேன். தேவையேற்பட்டால் மேலதிக சலுகைகளையும் ஏற்படுத்துவேன் என தெரிவித்திருந்தார். ஆனால் தம்மை பொறுத்தவரையில், 13ஆவது சட்டத்திருத்தம் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளை ஒன்றிணைக்கும் திட்டமாகவே நடைமுறைப்படுத்தப்படும் மாறாக எவ்வித மேலதிக திணிப்புகளும் இடம்பெறாது என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM