சசிகலா-பன்னீர்செல்வம் இடையே தோன்றியிருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில், அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர்களின் பலத்தைத் தக்கவைத்துக்கொள்ள, அவர்களை உல்லாச விடுதிகளில் சசிகலா ‘சிறை’ வைத்திருப்பதாகவும், அவர்களில் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன.
தான் முதலமைச்சராவதற்குத் தேவையான எம்.எல்.ஏ.க்கள் பலத்தைக் காட்டவும், சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் இருந்தால், ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கம் அவர்கள் சாய்ந்துவிடக் கூடும் என்ற பயத்திலும், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை அனைவரையும் நான்கு குழுக்களாகப் பிரித்து வெவ்வேறு பகுதிகளுக்கு உல்லாசப் பயணம் அனுப்பி வைத்திருக்கிறார் சசிகலா.
அதில் ஒரு குழுவினர், சென்னையில் இருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மகாபலிபுரத்தின் உல்லாச விடுதியொன்றில் தங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
அதிசொகுசுப் பேருந்தில் நேற்று (8) மாலை கிளம்பிய சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்படி விடுதியில் ‘சகல’ வசதிகளுடனும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
எனினும், அந்தப் பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி எஸ்.பி.சண்முகநாதன் என்ற எம்.எல்.ஏ., தப்பிச் சென்றிருப்பதாகத் தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வத்திடம் பலவந்தமாக ராஜினாமா கடிதத்தை வாங்க சசிகலா முயற்சித்தபோது, அதற்கு சண்முகநாதன் எதிர்ப்புத் தெரிவித்தார் என்றும், தப்பிச் சென்றிருக்கும் அவர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM