கர்நாடகாவில், அரசாங்க வைத்தியர் ஒருவர் கடந்த இருபது வருடங்களாக விடுமுறையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சுகாதாரத்துறை ஆணையர் சுபோத் யாதவ்வின் பணிப்பின் பேரில் அரசாங்க வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் வருகைப் பதிவேடுகளை ஆராய்ந்தபோதே இந்த ‘பகீர்’ தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவின் பெரும்பாலான கிராமப்புறப் பகுதிகளில் இயங்கும் வைத்தியசாலைகள் மற்றும் நகரங்களில் இயங்கும் சில வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் சிலர் உரிய அனுமதி இல்லாமல் விடுமுறையில் செல்வதாக சுகாதாரத்துறையில் அடிக்கடி முறைப்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்தே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதில், ஒரு பெண் வைத்தியர் 1997ஆம் ஆண்டு முதல், சுமார் இருபது வருடங்களாக, அனுமதி இல்லாமலேயே விடுமுறையில் இருந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, 2000ஆம் ஆண்டு முதல், கடந்த பதினாறு வருடங்களாக ஒரு வைத்தியர் விடுமுறையில் இருந்து வந்திருக்கிறார்.
இவர்களைப் போலவே 103 வைத்தியர்கள் அனுமதி இல்லாமலேயே விடுமுறையில் சென்றிருக்கின்றனர். எனினும் இவர்களில் ஒருவரேனும் பணிநீக்கம் செய்யப்படவில்லை.
தம்மிடம் அளிக்கப்பட்ட இந்த அறிக்கையையடுத்து 83 வைத்தியர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்திருக்கிறார் யாதவ். ஏனையவர்களிடம் விளக்கம் கோரி கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM