பாகிஸ்தானில் சுமார் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக, அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நேரப்படி அதிகாலை 3:03 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும், குறித்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் தென்மேற்கு நகரான பஸ்னியிலிருந்து 23 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கடற்பரப்பில் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் பகிர்ந்துள்ளது.
இந்நிலையில் குறித்த நிலநடுக்கத்தினால் இதுவரை எவ்வித அனர்த்தங்களும் பதிவாகவில்லை என அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்படும் பிராந்தியமாக கருதப்படும் குறித்த பகுதிகளில், கடந்த வருடம் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் 6 பேர் உயிரிழந்ததுடன், 2015ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலம் நடுக்கம் காரணமாக 400 பேர் உயிரிழந்தமையும், 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் சுமார் 73000 பேர் வரை உயிரிழந்த நிலையில், 3.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM