கிரீஸில், இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது விழுந்து வெடிக்காத குண்டொன்றை அப்புறப்படுத்துவதற்காக சுமார் அறுபதாயிரம் பேர் தற்காலிகமாக இடம்பெயரவேண்டிய சூழல் எழுந்துள்ளது.
கிரீஸின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான தெஸ்ஸாலோனிக்கி என்ற நகரில், இரண்டாம் உலக யுத்தத்தின்போது விழுந்து வெடிக்காத குண்டொன்று அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. இதை அப்புறப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியைச் சுற்றிலும் சுமார் 2 கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்தில் உள்ள சுமார் அறுபதாயிரம் பேரை தற்காலிகமாக அப்புறப்படுத்த அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.
தெஸ்ஸாலோனிக்கியின் மத்தியி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில், எரிபொருள் தாங்கிகளைப் பொருத்தும் பணிகளின்போதே, நிலத்துக்கடியில் சுமார் ஐந்து மீற்றர் ஆழத்தில் இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
எதிர்வரும் ஞாயிறன்று இந்த குண்டு அகற்றப்படவுள்ளதாகவும், இதற்காக அப்பகுதி மக்கள் அனைவரும் சுமார் ஐந்து மணிநேரம் வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM