மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க கூடிய பொதுக்கூட்டத்தில், அதிமுக நிர்வாகிகள் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு வெற்றுத்தாளில் அவர்களிடம் இருந்து கையெழுத்து பெறப்பட்டுள்ளதாக சென்னை எழும்பூர் தொகுதி அ.தி.மு.க செயலாளரான த.மகிழன்பன் அதிர்ச்சி கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 29ஆம் திகதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூடியது.
இதில், 280 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 2,770 பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில்தான், சசிகலா பொதுச் செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதன்பின் டிசம்பர் 31 ஆம் திகதி, அவர் அந்த பதவியை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், டிசம்பர் 29ஆம் திகதி நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தங்களை மிரட்டி வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கியதாக சென்னை எழும்பூர் பகுதி அதிமுக செயலாளராக உள்ள மகிழன்பன் தெரிவித்துள்ளார். அவரின் பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'சசிகலாவும், நடராஜனும் சட்டம் குறித்த அச்சமே இல்லாமல் ஒரு புதிய உலகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். அம்மா காலத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் எப்படி நடக்கும் என்பதையாவது இவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டாமா? கழக நிரந்தரப் பொதுச்செயலாளர் என்று அம்மா (ஜெயலலிதா) தன்னை அறிவித்துக் கொண்டாலும், பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை கட்சி முறைப்படி அறிவிப்பார்.
'பொதுச்செயலாளர் தேர்தல் நடக்கவிருக்கிறது, போட்டியிட விரும்புவோர், தங்கள் விபரங்களைக் கொடுக்கலாம்' என்று அந்த அறிவிப்பில் சொல்ல பட்டிருக்கும். சசிகலா அதை ஏன் செய்ய வில்லை? அப்படிச் செய்தால் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தீபா அம்மா வீட்டுக்குத்தான் போயிருப்பார்கள். கட்சிக்குப் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய அவர்கள் தி.நகருக்குத்தானே போகமுடியும். தீபா அம்மா அனைத்தும் அறிந்தவர். ஊடகம் தொடர்பில் படித்திருக்கிறார், பண்பாகப் பேசுகிறார், மொழியறிவும் இருக்கிறது.
வீட்டைத் தேடிப்போய் நிற்கிற தொண்டர்களுக்கு ஆறுதல் சொல்லவும் 'நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று தைரியம் கொடுக்கவும் அம்மாவைப் போலவே நம்பிக்கை தருவது தீபா அம்மா மட்டும்தான். அம்மா வாழ்ந்த அந்த புண்ணியத்தலம், போயஸ்கார்டனுக்கு தீபா அம்மாவைக் கொண்டுபோக நாங்கள் காத்திருக்கிறோம்.
'சசிகலா தரப்பு செய்துள்ள சகல குளறுபடிகளையும், விதி மீறல்களையும் விளக்கமாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். துப்பாக்கி முனையில் என்னை காரில் கடத்திதான் பொதுக்குழுவில் கையெழுத்தே வாங்கினார்கள்... என்னைப் போல எத்தனை பேரோ? வடசென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் நா.பாலகங்காவே என்னை தொலைபேசியில் அழைத்து, 'கொஞ்சம் வருகிறீர்களா?' என்று கூப்பிட்டார். மாவட்டச் செயலாளர் கூப்பிடுகிறாரே என்று நம்பிப் போன என்னைத் துப்பாக்கி முனையில் காரில் ஏற்றி பொதுக்குழுவுக்குக் கொண்டு போனார்கள். வெற்றுப் புத்தகத்தில் கையெழுத்து வாங்கினார்கள். அவர்களின் அவசரத்தில் அன்று ஒரு தவறு செய்தனர்.
'பொதுக்குழு உறுப்பினராகிய த.மகிழன்பன் ஆகிய நான் சசிகலாவை பொதுச் செயலாளராக கொண்டு வரும் படிவத்தில் கையெழுத்திடுகிறேன்' என்று சொல்லிதான் கையெழுத்தே வாங்கியிருக்கவேண்டும். பதவியை அடையும் வேகம், ஆத்திரம் மட்டுமே அவர்களிடம் இருக்கிறது. கடத்திப்போய் படிவத்தில் கையெழுத்து வாங்கத் தெரியாத கைநாட்டுகளிடம்தான் இப்போது கழகம் சிக்கிக் கொண்டிருக்கிறது. என்னைப் போலவே பலர் பொதுக்குழுவில் கையெழுத்து போட கட்டாயப் படுத்தப் பட்டோம். ஆனால் யாரிடமும் அங்கே படிவத்தில் கையெழுத்து வாங்கவில்லை. படிவம் என்றால் என்னவென்றே தெரியாத ஆட்கள்தான் இப்போது அங்கிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் கட்சியை இவர்கள் எப்படிக் காப்பாற்றமுடியும் ? நல்ல விலைக்கு விற்காமல் இருந்தாலே போதும்" என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM