தென்னாபிரிக்க அணிக்கெதிராக இன்று இடம்பெறவுள்ள 4 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் உப தலைவர் டினேஷ் சந்திமலுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவருக்கு பதிலாக சடுன் வீரக்கொடி இலங்கைக் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில் டினேஷ் சந்திமல் ஓட்டங்களைப் பெறத்தவறியிருந்தார். இந் நிலையிலேயே சந்திமலுக்கு இலங்கை அணியில் இருந்து ஓய்வளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்க அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 0-3 என இலங்கை அணி இழந்துள்ள நிலையில் இன்று 4 ஆவது ஒருநாள் போட்டி இடம்பெறவுள்ளது.
இப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு தென்னாபிரிக்காவின் கேப்டவுனின் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM