குடிபோதையில் வந்த சாரதியால், 14 பாடசாலை மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்றுராஸில் இடம்பெற்றுள்து.
ஒன்றுராஸ் தலைநகரான டெக்குசிகல்பாவிலுள்ள, அதிவேக நெடுஞ்சாலையில் குடிபேதையுடன் வேமாக வந்த லொறி சாரதி, பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பஸ் மீது மோதியுள்ளார்.
குறித்த விபத்து நிகழ்ந்தப்போது பஸ்ஸில் மொத்தமாக 60 பேர் பயணித்துள்ளார்கள். விபத்து நடந்தவுடன் 14 பேர் இறந்துள்ளதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 34 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்களை ஏற்றிய நிலையில் மிகவும் வேகமாக வந்துள்ள குறித்த லொறியின் சாரதி, ஒரு வகை போதை பானத்தை அருந்தியிருந்ததால், லொறி கட்டுப்பாட்டை இழந்து, பாடசாலை பஸ்மீது மோதியுள்ளது.
மேலும் குறித்த விபத்தினால் 23 வயதான பஸ் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தப்பிச் செல்ல முயன்ற லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டள்ளார்.
விபத்து நிகழ்ந்தப்போது குறித்த சாரதியிடமிருந்து ஒரு வகை போதை பானத்தின் மனம் வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM