ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால், இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தான் ஏற்பட்ட பனிப்பாறை சரிவின் காரணமாக ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளதுடன், பாகிஸ்தானின் வட பகுதியிலுள்ள இமயமலை பகுதிகளில் ஏற்பட்டுள்ள பனிச்சரிவினால் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும் இந்துகுஸ் மலைப்பகுதிகளிலுள்ள வீதிகள், பனியினால் மூடப்பட்டுள்ளதுடன் கட்டிடங்களும் பாரியளவில் சேதமடைந்துள்ளன. மேலும் வெளியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் வீட்டிலிருந்து வெளியில் வரமுடியாமல் தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிகளில் தொடர்ச்சியான பனிச்சரிவுகள் இடம்பெறும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதனால், அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM